அக்டோபர் – 15
***உலக கைகழுவும் தினம்***
***சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்***
***உலக வெண்மைத்தடி தினம்***
(World White Lame Day)
பிரிஸ்டல் நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவர் 1921ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்போது தனது பார்வையை இழந்தார். இவர் சாலையை கடக்கும்போது தனது கையில் வெள்ளைத் தடியைப் பயன்படுத்தினார். வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. 1964ஆம் ஆண்டில் உலக வெண்மைத்தடி தினம் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
(International Day of Rural Women)
விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர். ஐ.நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
உலக கைகழுவும் தினம்
(Global Handwash Day)
முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.
புதன், 14 அக்டோபர், 2015
வரலாற்றில் இன்று...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....
தொடர்பு படிவம்
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது! உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.







0 comments:
கருத்துரையிடுக